spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாதவர் பிரேமலதா விஜயகாந்த்…

எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாதவர் பிரேமலதா விஜயகாந்த்…

-

- Advertisement -

தேமுதிக மாநாட்டில் தேமுதிகவினர் “நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது, முதல்வர் பதவி வேண்டும், 5 சீட்டு 10 சீட்டு தேவை இல்லை, நாங்க எல்லாம் ஆண்டப் பரம்பரை” மேடையிலேயே எல்லோரும் பேசினார்கள். முன்பு பெரிய கட்சி தான். ஆனால் இன்றைய எதார்த்தத்தை பிரேமலதா விஜயகாந்த் உணரவில்லை.எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாதவர் பிரேமலதா விஜயகாந்த்…2021 தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்டு 0.43% வாங்கினார்கள். அப்போது விஜயகாந்த் உயிரோடு இருந்தார். பின்பு 2024-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

 

we-r-hiring

அப்போது அதிமுகவினர் ஓட்டை வாங்கி 2.59% வாக்குவங்கியைத் தேமுதிக காட்டியது. மற்றபடி இவர்களுக்கு வாக்குவங்கி எல்லாம் இன்றைக்கு பெரிதாக இல்லை.

வாழ்ந்துகெட்ட ஜமீன்தார் என்ற முறையில் அவர்களுக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் அவர்களை யாரும் கெடுக்கவில்லை. 2016-ல் கலைஞர் கருணாநிதி அழைத்தபோதும் கூட்டணிக்கு செல்லாமல் அவர்களே தான் அவர்களை அழித்துக்கொண்டனர்.

இப்போது திமுக, அதிமுக என எல்லோரையும் “நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது” என்று பேசி மிரட்டுவதாக நினைத்துக்கொண்டு அவர்களே அவர்களை நகைப்பிற்கு உள்ளாக்குகிறார்கள்.

இன்றைய நிலையில் அவர்களுக்கு 6 சீட்டே அதிகம். எல்லோரும் கழட்டிவிட்டால் இன்றைக்கு அவர்கள் 0.2% கூட வாங்க மாட்டார்கள் என்பது தான் எதார்த்தம். இந்து எதார்த்தைக் கூட புரிந்துக்கொள்ள தெரியாத தலைவர்தான் பிரேமலதா விஜயகாந்த்.

டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்…

MUST READ