spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு… இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

-

- Advertisement -

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும், அவர்களது 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்றது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

we-r-hiring

fishermen arrested

இந்த நிலையில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை இன்று எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ