spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை…

இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை…

-

- Advertisement -

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று காலை இலங்கையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தனர்.இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை...

சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், ராமேஸ்வரத்திற்கு, அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம், மற்றும் ஆகஸ்ட் மாதம், தனித்தனியே 3 விசைப்படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்த மீனவர்கள், ராமேஸ்வரம் 15 பேரை, இலங்கை கடற்படையினர், அவ்வப்போது பிடித்து, அவர்களை கைது செய்ததோடு, மீனவர்களின் படகுகள், வலைகள் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

அதன்பின்பு ராமேஸ்வரம்  மீனவர்களை, இலங்கைக்கு கொண்டு சென்று, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும், உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு, கடிதங்கள் எழுதினார்.

இதற்கிடையே இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தனர்.இந்த நிலையில் இலங்கை நீதிமன்றம், மீனவர்களை படிப்படியாக விடுவித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம், ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் போன்றவைகளை நடத்தினர். அதோடு மீனவர்கள் 15 பேருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கினர். மேலும் மீனவர்கள் 15 பேரையும், தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான விமான டிக்கெட்டுகள் ஏற்பாடுகளையும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் செய்தது.

இந்த நிலையில் இன்று காலை, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 15 பேரையும் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவர்களுடைய சொந்த ஊரான, ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மளமளவென குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

MUST READ