spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு20 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

20 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

-

- Advertisement -

 

சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
Video Crop Image

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஒருநாள் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

மூன்றாயிரம் பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைவதால் புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக, செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற தீர்ப்பு மிகச்சரியானது – ராமதாஸ்

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 16- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 20 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

MUST READ