spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு500 மதுபானக் கடைகள் மூடல் - ஜுன் 3ல் அறிவிப்பு

500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்பு

-

- Advertisement -

500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்பு

ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளில் 500 மதுபானக் கடைகளை மூடுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

Tasmac tamilnadu

தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,289 மதுபான கடைகள் செயல்படுகின்றன. இதன்மூலம் மாநில அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.36,056 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்தது. டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மூடப்படும் மதுபானக் கடைகளின் பட்டியலையும் டாஸ்மாக் நிர்வாகம் தயார் செய்தது.

we-r-hiring

அதன்படி பள்ளி, கல்லூரிகள், கோயில்களுக்கு அருகே உள்ளா 500 மதுபானக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. எந்தெந்த கடைகள் மூடப்படும் என்பது குறித்த அறிவிப்பை ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடதக்கது.

MUST READ