
தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் (Aavin), பால், மோர், நெய், லஸ்ஸி, ஐஸ்கிரீம், யோகர்ட், மில்க் ஷேக், வெண்ணெய், பன்னீர், பால் பவுடர் மற்றும் இனிப்பு வகைகள், கார வகைகள் உள்ளிட்டவைகளை சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், குடிநீர் விற்பனையை ஆவின் நிறுவனம் தொடங்கவுள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த படிவம் வெளியீடு!
அதன்படி, 500 மி.லி. மற்றும் ஒரு லிட்டர் குடிநீரை விற்பனை செய்ய, ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம், டெண்டர் கோரியுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்பனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாபத்தில் இயங்கி வரும் ஆவின் நிறுவனம், பல்வேறு புதிய பொருட்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 4,000- க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!
ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளிலும் மினரல் வாட்டர் பிளாண்ட் இருக்கிறது. எனவே, குடிநீர் தயாரிப்பு பணிகள் தொடங்குவது மிகவும் சுலபம் என்பது குறிப்பிடத்தக்கது.