ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடிய மக்களவை!
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பால் ஒரு லிட்டருக்கு ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவனத்தால் வரும் டிசம்பர் 18- ஆம் தேதி முதல் வழங்கப்படும். பால் கொள்முதல் விலையை ரூபாய் 3 உயர்த்துவதன் மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.
அத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!
பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 35- லிருந்து ரூபாய் 38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 44- லிருந்து ரூபாய் 47 ஆக உயர்த்தப்பட்டுள்ளது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.