- Advertisement -
வேளாண் பட்ஜெட்- சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
- அதிகளவில் சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
- சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மாற்று சாகுபடிக்காக ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இயற்கை விவசாய விளைப் பொருட்களை சந்தைப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் 15,500 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள 750 தொகுப்புகள் உருவாக்கப்படும்.
- சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி உள்ளிட்ட அரிய நெல் ரக வித்துகள் மேலும் 200 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும்.
- முதற்கட்டமாக ரூ.2.5 கோடியில் 2500 கிராமங்களில் கிராம வேளாண்மை முன்னேற்ற குழு அமைக்கப்படும்.
- நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்.
- 60 ஆயிரம் வேளாண் தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடியில் வேளாண் கருவிகள் வழங்கப்படும்.
- தரிசாக உள்ள பகுதிகளை கண்டறிந்து ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.
- வட்டார அளவில் விவசாயிகள் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும்.
- குறுவை சாகுபடி காலத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் செய்வதை ஊக்குவிக்க ரூ.16 கோடியில் திட்டம்
- ஆதிதிராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
- பயிறு வகைகளின் பரப்பளவையும் உற்பத்தியையும் அதிகரிக்க ரூ.30 கோடியில் பயிறு பெருக்குத் திட்டம்
- தென்னை வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 10,000 பண்ணைய தொகுப்புகளுக்கு தலா ரூ.50,000 வீதம் வழங்க ரூ.50 கோடி மானியம் வழங்கப்படும்.
- ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரிய காந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ரூ.12 கோடியில் பருத்தி இயக்கம்
- கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.285 கோடி வழங்கப்படும்.