Homeசெய்திகள்தமிழ்நாடுகுன்னூர் அருகே மீண்டும் கிராம மக்களை தூங்கவிடாமல் செய்த கரடி:  வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை 

குன்னூர் அருகே மீண்டும் கிராம மக்களை தூங்கவிடாமல் செய்த கரடி:  வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை 

-

- Advertisement -

குன்னூர் அருகே தினந்தோறும் பள்ளியின் சமையல் அறை மற்றும் மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை சூறையாடிய செல்லும் கரடி மனிதர்களை தாக்குவதற்கு முன் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் அருகில் அமைந்துள்ளது டென்ட் ஹில் பகுதி. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளியில் கரடி ஒன்று புகுந்து சமையல் அறையை உடைத்து உணவு பொருட்களை உண்டு சென்றுள்ளது.

மேலும் அருகே உள்ள மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை சூறையாடி சென்றுள்ளது. தினந்தோறும் கரடி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. நேற்று இரவு இந்த பகுதியில் கரடி மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை சூறையாடி சென்றுள்ளது. இது குறித்து வனத்துறையினர் தகவல் அளித்தனர் வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20 வயது பெண்ணை கற்பழித்த 18 வயது வாலிபர் கைது

MUST READ