spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலி

கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலி

-

- Advertisement -

கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலி

சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

fishermen arrested

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (19 வயது). இவரும், மாரியப்பன்,மணிகண்டன்,சத்தியபாலன்,ராஜ்குமார் உள்ளிட்ட ஐந்து பேரும், அதே கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடிக்க வாணகிரி கிராமத்தில் இருந்து சென்றுள்ளனர்.

we-r-hiring

கரையிலிருந்து சுமார் 15 கி.மீ .தூரத்தில் மீன் பிடித்து கொண்டு நள்ளிரவில் கரை திருப்பி கொண்டிருக்கும் போது கடல் சீற்றத்தின் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில் படகில் பயணித்த ஐந்து மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் நான்கு பேர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், ராஜ்குமார் மட்டும் கடல் அலைகள் சிக்கி உயிரிழந்தார். ராஜ்குமாரின் உடல் காவேரி ஆற்றின் முகத்துவாரத்தில் கரை ஒதுங்கியது. உடலை கைப்பற்றிய பூம்புகார் போலீசார், வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ராஜ்குமார் உடலை கொண்டு சென்றனர்.

MUST READ