சாலையோர 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து
விழுப்புரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.
திண்டிவனத்தில் இருந்து நெய்வேலிக்கு சென்ற லட்சுமி குருசாமி தனியார் பேருந்து விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் பலத்த காயம் உள்ளிட்ட 30 பயணிகள் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வளவனூர் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் காயம்பட்டவர்களை மீட்டு ஆறு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பெண் கவலைக்கிடமாக உள்ளார்.
விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை போடும் பணி மந்தமாக கிடப்பில் போட்டுள்ளதால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில் பேருந்தானது பஞ்ச மாதவி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இடதுபுரத்திலிருந்து வலது புறம் சாலை கட் செய்யும் போது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுனர் சபரிநாதன் பிரேக் போட்டபோது பேருந்தின் பிரேக் கட் ஆகி கட்டுபாட்டை இழந்து சாலையோர 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது..