ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய Statue Of Wisdom-ன் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் அறிவித்ததற்கிணங்க, ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாட்டங்கள்! 38 மாவட்டங்களிலும் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள், தமிழோசை, அரசு ஊழியர், ஆசிரியர் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு, வினாடி வினா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இவற்றைத் ‘திருக்குறள் திருவிழா – தமிழர்களுக்குத் தெவிட்டாத பெருவிழா’ என்ற பெருமிதத்துடன் தொடங்கி வைத்தேன். வள்ளுவம் போற்றுதும்!,” என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
ஊரக மற்றும் நகர்ப்புற பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்


