திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.மேலும் தனது எக்ஸ் பதிவில், “இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!” என பதிவிட்டுள்ளார்.
"இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!"
மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!
நம்பிக்கையோடு முன்செல்கிறேன்…
பெருமையோடு சொல்கிறேன்…
"தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!"#3YrsOfMKStalinGovt pic.twitter.com/kJfRKp0OMx
— M.K.Stalin (@mkstalin) May 7, 2024
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கடையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், எ.வ.வேலு, சேகர் பாபு, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோரும் உடனிருந்தனர்.
இதன் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.