இனாம் நிலங்களை கோயில்களுக்கு கொண்டுவந்து அதனுடைய வாடகையை உயர்த்தி அந்த மக்களை வெளியேற்றி இந்து சமய அறநிலைத்துறை என்ன சாதிக்கப் போகிறது என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் என ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்துவது தொடர்பாக மே 17 இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்,விடுதலை தமிழ் புலிகள் கட்சி
ஆகியோர் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,இனாம் என்று சொல்லக்கூடிய மானிய நிலங்கள் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அல்ல, தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் இனாம் நிலங்கள் உள்ளது. கோயில் நிலங்கள் ஒன்றேகால் லட்சம் ஏக்கர் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை இனாம் நிலங்களை கோயில் நிலங்களாக கருதி விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிடமிருந்து அதனை நீதிமன்ற உத்தரவு மூலம் பறித்து வருகிறது. இதன் மூலம் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி பிடுங்கப்பட்ட நிலங்களை திரும்பி வழங்க வேண்டும்.
நீர் நிலைகளில் இருக்கக்கூடிய அரசு கட்டிடங்களை அப்புறப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக ஏழை எளிய மக்களின் வீடுகளை தொடர்ந்து இடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய திமுக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. இனாம் நிலங்களில் உள்ள சாமானிய மக்களை வெளியேற்றுவது என்பது சமூக நீதிக்கு எதிரானது. இனாம் ஒழிப்பு என்பதை கொண்டு வந்த பிறகு இனம் வகைப்பட்ட ஏழை எளிய மக்களை வெளியேற்றுவது சமூக நீக்கு எதிரானது. இனாம் நிலங்களை எதற்காக இந்து சமய அறநிலைத்துறை கையகப்படுத்துகிறது என்று விளக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த நிலங்களில் என்ன செய்யப் போகிறது என்பதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பட்டாபிராமில் ஸ்மார்ட் டைடல் பூங்கா – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்… 6000 பேருக்கு வேலை உறுதி