
சென்னையை புழல் காவல் நிலைய பகுதிகளில் பல்வேறு இடங்களில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை முயற்சி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட செங்குன்றம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த முரளி என்ற குசுமி முரளி (வயது 22) என்பவர் மீது மாதவரம் புழல் செங்குன்றம் கொளத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் 8 குற்ற வழக்குகள் உள்ளது.

கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன்!
அதேபோல், வியாசர்பாடி கரிமேடு பிவி காலனியை சேர்ந்த நாகராஜ் என்ற யூடியுப் நாகராஜ் (வயது 23) என்பவர் மீதும் பல்வேறு காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து, தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்த புழல் குற்றப்பிரிவு ஆய்வாளர் சதீஷ் சிறையில் அடைத்தார்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்’ – நாளை தமிழகம் முழுவதும் அமல்
அதைத் தொடர்ந்து, காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.