
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேருவதற்கான வயது வரம்பை 58 ஆக உயர்த்தி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ!
‘டெட்’ தேர்வில் தேர்ச்சிப் பெற்று பல்லாயிரக்கணக்கானோர் நியமனத் தேர்விற்காகக் காத்திருக்கின்றனர். தேர்விற்காகக் காத்திருந்து வயதாகிவிட்டால், அரசுப் பணியில் சேர முடியாது என்ற கவலையும் பலருக்கு இருந்தது. இந்த நிலையில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 58 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிட நியமனத்திற்கு பொதுப்பிரிவினருக்கான உச்ச வயது வரம்பு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. நிலை- பார்வையிடக் குழு அமைப்பு!
வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் ‘டெட்’ தேர்வு எழுதிக் காத்திருப்போர் பயனடைய உள்ளனர்.