
பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
போதையில்லா தமிழகம் – ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை பராமரிப்பு பணிகள் முடிந்து, பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பலத்த காற்றின் காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சரிசெய்தனர். தற்போது இரண்டு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
ஆவடி மாமன்ற வார்டு உறுப்பினர்கள் வேதனை
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது”. இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.