Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி - 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

-

மழை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படியே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (நவ-14) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதி வாக்கில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை

இதனையொட்டி, இன்று ( நவ – 14) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

MUST READ