Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜன.10- ல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்!"

“ஜன.10- ல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்!”

-

- Advertisement -

 

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
TN Govt

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, வரும் ஜனவரி 10- ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஒவ்வொரு மாதமும் ஜனவரி 15- ஆம் தேதி அன்று வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் ஜனவரி 10- ஆம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 1 கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்”. இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை!

தமிழக அரசின் பொங்கல் திருநாள் பரிசுத் தொகை அறிவிப்பால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ