spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு - முதலமைச்சர் மு.க...

காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேதனை!

-

- Advertisement -

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் – காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு என முதலமைச்சர் வேதனை!காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேதனை!

நாட்டின் 13வது பிரதமர் மன்மோகன் சிங் நேற்று வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். அவரது உடல் டெல்லி மோதிலால் நேரு சாலையில் அமைந்துள்ள  இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மாநில முதலமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி சென்று மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

we-r-hiring

காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேதனை!

தமிழ்நாடு முதலமைச்சருடன் திமுக எம்.பி-க்கள் டி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதிமாறன், எம்.எம் அப்துல்லா உள்ளிட்டோர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி இந்திய நாட்டுக்கான பேரிழப்பு என தெரிவித்தார். நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்கியவர் என்ற பெருமையை பெற்றவர் என்றும் , தமிழ்நாட்டிற்கு மதுரவாயல் திட்டம், மாநில சாலை வசதி, 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றியதோடு தமிழரின் கனவாக இருந்த “செம்மொழி” திட்டத்தை சோனியா காந்தி துணையோடு நிறைவேற்றி தந்தவர் மன்மோகன் சிங் என புகழாரம் சூட்டினார்.காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேதனை!

கலைஞருடன் நெருங்கி பழகியவர் இன்று மறைந்து விட்டார் என்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், காங்கிரஸ் பேரியக்கம் மற்றும் அதன் தொண்டர்களுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சரும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் மெட்ரோ திட்டம், கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் உள்ளிட்டவை தற்போது செயல்பாட்டில் உள்ளது என்றால் அதற்கு  காரணம் மன்மோகன் சிங் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா பொருளாதாரத்தை கட்டமைத்தவர் டாக்டர் மன்மோகன் சிங் – வைகோ இரங்கல்

MUST READ