Homeசெய்திகள்தமிழ்நாடு"அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து; டிச.21- ல் தண்டனை விவரங்கள்"- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து; டிச.21- ல் தண்டனை விவரங்கள்”- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

-

 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது…. வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு!

கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியின் போது, அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவர் மீதான குற்றச்ச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், விடுதலை செய்து, கடந்த 2016- ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனை எதிர்த்து, 2017- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அப்போது, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன.

இவைகளில் உண்மைத்தன்மை இல்லை என்றும், மனைவியின் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும் பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிச.19) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தார்.

விஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை…. ‘தளபதி 68’ அப்டேட்!

அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21- ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், அன்றைய தினம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நேரில் ஆஜராக வேண்டும். அமைச்சர் பொன்முடி 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ