Homeசெய்திகள்தமிழ்நாடுதிருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம்- மு.க.ஸ்டாலின்

திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம்- மு.க.ஸ்டாலின்

-

திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம்- மு.க.ஸ்டாலின்

அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காகதான் பாடுபடுகிறோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

கோவை கொடிசியாவில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. எந்தத் துறையாக இருந்தாலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி முக்கியமானது. 450 அரங்குகளுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முக்கியம். 2,300 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்காக அதிகரித்துள்ளன. மக்கள் அளித்த அதிகாரத்தை வானளாவியதாக நினைப்பதில்லை. திருக்குறளைப் போல் நெறிபடுத்தி அதிகாரத்தை செயல்படுத்திவருகிறோம்.

இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி வரை ஆதார நிதி வழங்கியுள்ளோம். சமூக நீதியுடன் சமச்சீர் தொழில் வளர்ச்சி என்பதே அரசின் நோக்கம். பல்வேறு மாவட்டங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன” என்றார்.

MUST READ