திமுக ஆட்சியை அகற்ற சதி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் ₹10.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி புதிய அலுவலகமான கலைவாணர் மாளிகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்கள் திமுக ஆட்சிக்கு எதிராக வேண்டுமென்றே புழுதிவாரி தூற்றுகின்றனர். திமுக ஆட்சியை அகற்ற சிலர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் . நம்முடைய வெற்றியை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் கலவரம் செய்ய முயற்சிக்கின்றனர். சாதி கலவரம், மத கலவரத்தை ஏற்படுத்த சதி நடக்கிறது. தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள சிலர் திமுக ஆட்சியை விமர்சிக்கின்றனர். மக்களிடத்திலே பிளவுகளை ஏற்படுத்தலாமா என திட்டமிட்டு காரியங்களில் ஈடுபடுகின்றனர். பிரச்சனைகளை தூக்கிவைத்துவிட்டு கவுரவம் பார்க்காமல் திமுகவினர் ஒற்றுமையாக செயல்படவேண்டும். தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால் நம் பிழைப்பு என்ன ஆவது என சிலர் நினைக்கின்றனர்.
தமிழ்நாட்ட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும், இதற்கு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும், தமிழ்நாட்டில் மதசார்ப்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைத்து தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றுவருகிறோம். கலைஞரின் சிலையை திறந்தால் மட்டும் போதாது அவரின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும். பல மாநிலங்களில் உள்ள தலைவர்கள் திமுக அரசின் பணிகளை மனதார பாராட்டுகின்றனர்” என்றார்.