இந்திய உணவு பாதுகாப்பு கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்கள் முன்னேற்றம் குறித்து பெரியாரைப் போல யாரும் பேசியதில்லை என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பெண்கள் வாழ்வில், ஏற்றம் என்பது எப்போதும் வேண்டுமென கனிமோழி உறையாற்றினாா்.
இந்திய உணவு பாதுகாப்புக் கழகத்தின் தென் நிர்வாக இயக்குனர் ஜெஸிந்தா லாரன்ஸ், இந்திய உணவு பாதுகாப்புக் கழக விளையாட்டு பிரிவின் பொது மேலாளரும் தடகள வீராங்கனையுமான பத்மஸ்ரீ சைனி வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகளை வழங்கிய கனிமொழி, சிறப்புரையும் ஆற்றினார். அப்போது, “ மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த அவர், 30% பெண்கள் இந்த உணவுக் கழகத்தில் பணியாற்றி வருவது, அரசியல் சூழலில் இருப்பதை விட அதிகம்.
மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல எனக் கூறிய கனிமொழி பேசியதாவது, ”பெண்களின் உரிமை, பெண்களின் சமநிலை, தர்மத்திற்காக பெண்களின் போராட்டம் உள்ளிட்டவற்றில் தொடர்புடையதாகும். பெண்களை சமமானவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகம் தரும் ஒவ்வொன்றிலும் பெண்களுக்கும் இடம் உள்ளது. பெண்கள் முன்னேறி படித்து ,பணியில் சேர இன்று வரை அரசு பல முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.
வீடுகளில் சமைத்து கொண்டிருப்பது நீங்கள் செய்யும் துரோகம் என்ற பெரியாரின் கூற்றை சுட்டிக்காட்டி பெரியாரை விட நேரடியாக யாரும் பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசியிருக்க முடியாது. பல மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்த போது எந்த கருத்தும் எழாத நிலையில், டெல்லியில் ஒரு பெண் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, மட்டும் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது வேதனையாக உள்ளது.
பெண்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தகுதியானவர் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டும். நேரம் காலம் பார்க்காமல் பணி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. ஊடகத்துறையில் பெண்கள் வருவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. பெண்கள் எங்கு செல்ல நினைத்தாலும் அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்நாடு பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
உணவு தட்டுப்பாடு என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான் . உணவுக்காக போராடும்போது அடுத்த கட்டத்தை பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ள பெண் இனத்திற்கு ஏற்றமான மாற்றம் வேண்டும் என்றும் கனிமொழி உரையாறிறினார்.