Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு!

-

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது முந்தைய நாள் விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இதேபோல் ஒரு கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,695க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 40 பைசா உயர்ந்து ஒரு கிராம் 96 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.96,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ