spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவரத்துக் குறைவால் தக்காளி விலை கடும் உயர்வு!

வரத்துக் குறைவால் தக்காளி விலை கடும் உயர்வு!

-

- Advertisement -

 

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு... பொதுமக்கள் கவலை!
File Photo

சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது.

we-r-hiring

ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!

கடந்த சில வாரங்களாக, தக்காளியின் விளைச்சல் குறைவு மற்றும் வரத்துக் குறைவுக் காரணமாக, தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து, விலை அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் மளிகைக் கடை மற்றும் காய்கறிக் கடைகளில் முதல் தரமான தக்காளி கிலோ ரூபாய் 130- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அன்றாட சமையலில் பயன்படுத்தக் கூடிய, அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!

அதேபோல், ஒரு கிலோ வெங்காயம் 21 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலை 80 ரூபாய்க்கும், கேரட் 60 ரூபாய்க்கும், பீன்ஸ் 110 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

MUST READ