spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை  - தமிழக அரசு அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை  – தமிழக அரசு அறிவுறுத்தல்

-

- Advertisement -

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை  - தமிழக அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்நிலையில், இது தொடர்பாக உள்துறை செயலாளர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு சிறப்பு பிரிவு ஐஜி கயல்விழி, காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஐஜி, குழந்தைகள் நலத்துறை இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

we-r-hiring

இதில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக பதிவாகி உள்ள குற்ற வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அனைத்து துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். குறிப்பாக தமிழக அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது பலர் புகார் அளிக்க முன் வந்து உள்ளதாகவும் இந்த கூட்டத்தில்  தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வழக்குகளை விசாரிக்க கூடுதலாக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டுமா என்பது தொடர்பான ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தினார். இது போன்று சிறார்கள் தொடர்பான குற்ற வழக்குகளையும் விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அண்ணா பல்கலை, பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’: பத்திரிகையாளர்களை பதம்பார்க்கும் போலீஸ்..!

MUST READ