spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிசோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி

சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி

-

- Advertisement -

தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் தவித்து வரும் அரசுப்பள்ளி மாணவி ஒருவர் 566 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி

அவடி காமராஜர் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மாதிரிப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 537 மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 95 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தப் பள்ளியில் தேர்வு எழுதிய பவித்ரா என்கிற மாணவி 566 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் இவருடைய குடும்பப் பின்னணியை விசாரித்ததில் பவித்ராவின் வாழ்க்கையில் பெரும் சோகமே சூழ்ந்திருப்பதை அறியமுடிந்தது.

we-r-hiring

பவித்ராவின் தந்தை சத்தியநாராயணன் தனியார் பேக் தயாரிக்கும் கடையில் வேலைப் பார்த்து வந்துள்ளார். அவருடைய தாயார் வாட்டர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பவித்ராவின் தந்தை சத்தியநாராயணனுக்கு கடந்த சில ஆண்டுகளாக இரத்த புற்று நோய் இருந்து வந்தது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வந்த அவர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அந்த சோகத்தில் தவித்து வந்த மாணவி பவித்ரா, தேர்வுக்கு படிக்க புத்தகத்தை திறந்தாள் அப்பாவின் ஞாபகத்தில் மூழ்கி அழுது கொண்டிருந்தாள்.

சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி

அவருக்கு ஆறுதல் படுத்திய வகுப்பாசிரியர், குடும்ப பின்னணியை விசாரித்து உதவிகள் செய்துள்ளார்.  இந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி பவித்ரா 566 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் இரண்டாவது இடத்தை பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். தேர்வு எழுதி முடித்ததும் என்ன படிக்கலாம் என்று தேடுதலில் இருந்த பவித்ராவிற்கு ஆட்டோவில் வந்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் தலையில் பலத்த காயமும், இடுப்பில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. சோதனை மேல் சோதனையை சந்தித்து வரும் மாணவி பவித்ரா தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் மேல் படிப்பிற்கு தயாராகி வருகிறார். குடும்பமோ வறுமையில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் பவித்ரா எண்ண படிக்க விரும்புகிறார் என்று கேட்டபோது ” தற்போது CA கோச்சிங் வகுப்பில் படித்து வருகிறேன்.  B.Com படிப்பதற்கு கல்லூரியில் விண்ணப்பிக்க தயாராகி வருவதாக கூறினார்.

மேலும் இதுகுறித்து பவித்ராவின் வகுப்பு ஆசிரியை பெய்ஜியிடம் பேசியபோது, மாணவி பவித்ரா நன்றாக படிக்கக்கூடிய பெண், அவள் குடும்ப சூழலைப் பற்றியோ, வறுமையைப் பற்றியோ யாரிடமும் சொல்ல மாட்டாள். எப்போதும் படித்துக் கொண்டிருப்பாள். பொதுத் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு அவளுடைய தந்தை இறந்து விட்டார். அப்போது மிகவும் சோர்ந்து விட்டாள். அப்போது அவளை ஆறுதல் படுத்தி தேர்வை எழுத வைத்தோம் என்றார். மேலும் அவளுடைய கல்லூரி படிப்பிற்கு நானும் என்னுடைய நண்பர்கள் சிலரும் உதவி செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார். வாழ்க்கை எல்லோருக்கும் பாடத்தை நடத்திவிட்டு தேர்வு நடத்தும், ஒரு சிலருக்கு மட்டும் பாடம் நடத்தாமலே தேர்வை மட்டும் நடத்தி விடுகிறது. அதில் ஒருவர் பவித்ரா.

பொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் – இராமதாஸ் அறிவுரை

MUST READ