மதுரையில் பாஜகவினர் கலவரம் செய்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே யோகி ஆதித்யநாத், ரஜினிகாந்த் போன்றவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரவில்லை என்று வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு குறித்து அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில் மதுரையில் அறிவிக்கப்படாத பொது அடைப்பு போல உள்ளது. மதுரை மக்கள் எல்லாம் காலையிலேயே இறைச்சி கடைகளில் திரண்டு, ஆர்வமுடன் இறைச்சிகளை வாங்கிச்சென்று வீடுகளில் சமைத்து சாப்பிட்டனர். அதற்கு காரணம் பாஜகவினர் மதுரையில் உள்ள பெண்களுக்கு தலா ரூ.300-ம், ஆண்களுக்கு தலா ரூ.300, ஒரு குவாட்டரும் வழங்கினார்கள். அசைவ உணவை சமைத்து சாப்பிட்டு விட்டு மக்கள் வீடுகளில் தூங்கி கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு மாநாட்டிற்கு ஆட்களை காணாம்.
நான் இருக்கும் பகுதி மதுரை காலவாசல் ஆகும். தொன் மாவட்டங்கள், திண்டுக்கல், கரூர் போன்ற ஊர்களில் இருந்து இந்த வழியாக ஒரு வாகனம் கூட வரவில்லை. குன்றத்தை காப்போம் என்று கோஷமிட்ட பாஜகவினர், தற்போது மதுரையில் உள்ள பார்களில் உடகார்ந்து இருக்கிறார்கள். நீதிமன்றம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியபோதும் 52 நிபந்தனைகள் விதித்தது ஒரு கடிவாளம் ஆகும். மதச்சார்பற்ற மனிதநேய கூட்டணி, சங்பரிவார்களுக்கு எதிராக நடத்திய தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களிடம் எடுபட்டிருப்பதை நான் கண்கூடாக பார்க்கிறேன். இது கலவரக்காரர்கள் மாநாடு, முருக பக்தர்கள் மாநாடு அல்ல என்று மதுரை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, குடும்பத்துடன் வாருங்கள் என்று ஹெச்.ராஜா சொல்கிறார். ஏன் அவர் தனது மனைவியை மாநாட்டிற்கு அழைத்துவரவில்லை?. முருகரை வணங்குபவர்கள் தான் தமிழர்கள் என்று ஹெச்.ராஜா சொல்கிறார். திருமுருகாற்றுபடை எழுதிய, முதல் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய முருக பெருமானுக்கு, தமிழில் அர்ச்சனை நடைபெறுகிறதா? சமஸ்கிருதத்தில் தானே அர்ச்சனை நடைபெறுகிறது. தமிழ்க்கடவுள் தானே முருகன். பீகாரி கடவுளா முருகன்? உத்தர பிரதசத்தில் இருந்து யோகி வருவார். ரஜினிகாந்த் வருவார் என்று சொன்னார்கள். ஆனால் கலவர மாநாடு என்று தெரிந்துகொண்டு அவர்கள் வரவில்லை.
யோகிக்கு இங்கே எதிர்ப்பு அதிகம் உள்ளது. அதனால் அவர் வர மாட்டார். ரஜினிகாந்த், தமிழ்நாட்டு மண்ணை தெரிந்துகொண்டுவிட்டார். இது பெரியார் மண், இங்கே வீணாக சென்று பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நினைத்துவிட்டார். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். அவருக்கும், முருகனுக்கும் என்ன தொடர்பு? ஆளுநர் மாளிகையில் உள்ள ரவியின் பூஜை அறையில், முருகனுடைய படமும் இருக்கிறதா?
பாஜகவினர் மதுரையில் கலவரம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்கள். அதனை பெரியாரின் படை, மதநல்லிணக்க படை தவிடு பொடியாக்கிவிட்டோம். கூலி பட்டாளம் கூடியது. கலைந்தது. இதுதான் முருக பக்தர்கள் மாநாட்டின் செய்தியாகும். முருக பக்தர்கள் மாநாட்டில் முருகனை பற்றி பேசவில்லை. அவரது வலாற்றை பற்றி பேசவில்லை. அவர்கள் எப்படியாவது மதுரையில் கலவரம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்கள். நாங்கள் இங்கே கலவரம் செய்துவிட்டு ஒருவரும் தப்பித்து சென்று விடக்கூடாது என்று உறுதியாக இருந்தோம். காவல்துறையினர் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மதுரை நல்லிணக்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாகவே மிரண்டு போய் பாஜக சங்பரிவார் கூட்டம் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலவர கும்பல் வரவில்லை. நாங்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அதனால் பாஜகவினர் மிரண்டுவிட்டனர். அன்றைக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் நம்பினோம். இன்றைக்கு மதுரை மக்களே சங்கி கூட்டத்திற்கு செருப்படி கொடுக்க தயாராக உள்ளனர். ஏன் என்றால் அவர்கள் நடத்துவது பக்தர்கள் மாநாடு அல்ல. கலவரம் செய்வதற்காக அமைதியான மதுரையின் பெருமையை சீர்குலைக்கின்ற ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக போன்ற தீயசக்திகளை விரட்டியக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். அதன் காரணமாக அடங்கி ஒடுங்கி மாநாட்டிற்கு வந்துசெல்கின்றனர்.
மாநாட்டிற்கு மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வந்தார் என்கிறார்கள். ஏன் மாநாட்டிற்கு யோகி, ரஜினிகாந்த் போன்றவர்கள் வரவில்லை? அதற்கு காரணத்தை சொல்கிறார்கள். ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழ்நாட்டிற்கு போகிறார். வருகிறார். என்றைக்கு அவருக்கு தமிழ்நாடு பாடம் புகட்ட போகிறது என்று தெரியவில்லை. இந்து முன்னணி என்கிற பெயரில் நடைபெறும் அரசியல் மாநாட்டிற்கு. பாஜக சார்பில் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு உள்ளது. மதுரை முழுவதும் எத்தனை சாதி சங்கங்கள் சார்பில் கட்வுஅட் வைத்துள்ளனர் என்று பாருங்கள். அவர்களுக்கு பணம் யார் கொடுத்தது? இந்த மாநாட்டிற்கு மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வரவில்லை. தென்காசி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கரூர் போன்ற ஊர்களில் இருந்துதான் ஆட்களை அழைத்து வந்துள்ளனர். வடநாட்டுக்காரர்களை இறக்க பார்த்தார்கள். நாங்கள் எச்சரிக்கை விடுக்கவும் அவர்கள் இறக்கவில்லை.
நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி முருக பக்தர்கள் மாநாட்டில் பாஜகவினர் அரசியல் பேசினர். இதுகுறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிற இந்த மண்ணில் விஷத்தை பரப்ப வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் என்கிற விஷப்பாம்பு மதுரையில் தலையெடுக்க தொடங்கியிருக்கிறது. அதை சட்டத்தின் மூலம் வெட்டி எறியதான் போராடுகிறோம். முருக பக்தர்கள் மாநாட்டிற்காக பாஜகவினர் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணியினர் மறுபுறம் பணத்தை வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கும்பல் வளர்ந்தால் ஒரு ஆபத்தான கலாச்சாரம் தமிழ் மண்ணில் வளரும். இன்றைக்கு மதுரை மாநகர் மக்கள் மிகவும் தெளிவாகவும், விழிப்புணர்வோடும் சங்கிகள் கூட்டத்தின் சண்டியர்தனத்தை அடக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றி, இவ்வாறு அவர் தெரிவித்தார்.