சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர். நகரில் இன்ற மாலை எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக, அவரை வரவேற்க்கும் வகையில் அந்த பகுதியல் பல பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.ரவி சாரிபில் சாலை முழுவதும் அமைக்கபட்டிருந்த பேனர்களில் ஒன்று, திடீரென சரிந்து விழுந்தது.

மார்க்கெட்டுக்கு வந்திருந்த பெண் மீது அந்த பேனர் வழுந்ததில் அவர் காயமடைந்தாா். இதையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காயம் அடைந்த பெண்ணை அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
யாருக்கு எத்தனை தொகுதிகள்? திமுக கூட்டணி கணக்கு என்ன? ப்ரியன் நேர்காணல்!
