- Advertisement -

பொங்கல் விழாவை முன்னிட்டு, கோயம்பேடு வணிக வளாகத்திற்கு இன்று விடுமுறை என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சென்னையில் மாநகர சிறப்பு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இன்று (ஜன.17) மதிய உணவுக்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. மாநகர சிறப்புப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மதிய உணவிற்காக தலா ரூபாய் 50 வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு இன்று (ஜன.17) மாமல்லபுரம் கடலில் குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களுக்குள் செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
மாமல்லப்புரம் கிழக்குக் கடற்கரை சாலையில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள் மினி பேருந்தில் மாமல்லபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என காவல்துறை எஸ்.பி. சாய்பிரனீத் தெரிவித்துள்ளார்.