Homeசெய்திகள்இந்தியாஅயோத்தி ராமர் கோயிலில் கட்டுக்கடங்காதக் கூட்டம்!

அயோத்தி ராமர் கோயிலில் கட்டுக்கடங்காதக் கூட்டம்!

-

- Advertisement -

 

அயோத்தி ராமர் கோயிலில் கட்டுக்கடங்காதக் கூட்டம்!

அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காகக் குவிந்த பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

ஹீரோயின் அவதாரம் எடுக்கும் சின்னத்திரை கனவுக்கன்னி!

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர்கோயிலில் நேற்று (ஜன.23) மதியம் 12.30 மணியளவில் விஷேச பூஜைகளுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், கோயில் திறக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் ராமர் மற்றும் சீதைக்கு விஷேச பூஜைகள் செய்யப்பட்டு, அன்னதானம் நடைபெற்றது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முன்னாள் முதலமைச்சர்கள், தொழிலதிபர்கள், மடாதிபதிகள் என 8,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் அனந்தி பென் படேல் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்குள் சென்று வழிப்பட அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று (ஜன.23) இரவு அயோத்தி ராமர் கோயில் வளாகம் முழுவதிலும் மடாதிபதிகள், முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் தீபத்தில் ஜொலித்தது.

‘ரத்னம்’ படப்பிடிப்பு முடிஞ்சது…. ரிலீஸ் தேதியும் குறிச்சாச்சு…… மகிழ்ச்சியுடன் அறிவித்த விஷால்!

இந்த நிலையில், இன்று (ஜன.23) முதல் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபடலாம் என்று அறிவித்த கோயில் நிர்வாகம், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, இன்று (ஜன.23) அதிகாலை முதலே அயோத்தி ராமரை தரிசனம் செய்ய கட்டுக்கடங்காதக் கூட்டம் அலைமோதியது.

தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பக்தர்களை ஒழுங்குப்படுத்தி அயோத்தி ராமரை மகிழ்ச்சியுடனும், எளிதாகவும் தரிசனம் செய்ய பாதுகாவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அயோத்தியில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினருடன், துணை ராணுவப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ