spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

-

- Advertisement -

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 31- வது நீட்டிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும், அமலாக்கத்துறையினரின் கடும் எதிர்ப்பு காரணமாக ஜாமீன் மனுக்கள் நீதிமன்றங்கள் நிராகரித்தனர்.

இதனால் சென்னை புழல் சிறையில் 10 மாதங்களாக செந்தில் பாலாஜி சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (ஏப்ரல் 04) நிறைவுப் பெற்றதையடுத்து, சிறையில் இருந்தவாறு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளியில் ஆஜர்படுத்தப்பட்டார்.

“மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நீட்டித்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.

MUST READ