ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் ரூ. 63 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய பூங்காவிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருமுல்லைவாயல், செந்தில் நகரில் சுமார் ரூபாய் 36 லட்சம் மதிப்பிலும் மற்றும் அகத்தியர் தெருவில் சுமார் ரூபாய் 27.60 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய பூங்காகள் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டு இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் இன்று இரண்டு பூங்காவிற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
தங்கள் கோரிக்கையை ஏற்று செயல் திட்டத்தை கொண்டு வந்ததால் அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், மாநகர பொறுப்பாளர் , சண் பிரகாஷ், பகுதி செயலாளர் பேபி சேகர், நாராயண பிரசாத், 30ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.