Homeசெய்திகள்கட்டுரைகுலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?... பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை! 

குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?… பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை! 

-

- Advertisement -

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் திட்டம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாக தமிழக அரசு கலைஞர் கைவினைஞர் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றி திமுக வெளியிட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில் விஸ்வகர்மா திட்டத்தின் தீமைகள் குறித்தும், அதற்கு மாற்றாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள கலைஞர் கைவினை திட்டத்தின் நன்மைகள் குறித்தும் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. தனித்து போட்டி

அதில் அவர் கூறியிருப்பதாவது:- கைவினை கலைஞர்கள் முன்னேறுவதற்கு தொழில் ரீதியாக தேவையான ஆலோசனைகள் மற்றும் பொருள் உதவி செய்வதே விஸ்வகர்மா திட்டம். இந்த திட்டத்தை மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி அறிவித்தார். தமிழ்நாடு எப்போதும் குலக்கல்வி முறையை எதிர்த்து வருகிறது. இது தமிழ்நாட்டின் பாரம்பரியம். விஸ்வகர்மா திட்டத்திற்கான தகுதியாக குறிப்பிடப்படுவது என்னவென்றால் நீங்கள் கைவினைஞராக இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் கைவினைஞர் குடும்பத்தில் இருந்து வந்தவராக இருக்க வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு மரச்சிற்பம் செய்வது குடும்ப தொழில் எனில், அவர் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்பதற்கான ஆதாரங்களுடன் சென்றால் விஸ்வகர்மா திட்டத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்வார்கள். ஆனால் அந்த திட்டத்தில் நிதி கொடுப்பார்களா? என தெரியாது.

தமிழ்நாட்டில் நாம் ஒவியக்கல்லூரி, சிற்பக்கல்லுரிகளை வைத்துள்ளோம். பழமையான இந்த கல்லூரிகளில் யார் வேண்டுமானலும் எந்த படிப்புகளை வேண்டுமானாலும் படிக்கலாம். தமிழ்நாட்டில் பெரிய பெரிய கலைஞர்கள் எல்லாம் இந்த கல்லூரிகளில் படித்தவர்கள் தான். அப்படி இருக்கும் நிலையில் ஒவியம் பயின்று சிற்ப கலைஞராக உள்ள ஒருவர், சிற்ப குடும்பத்தில் இருந்து தான் வர வேண்டும் என சொல்வது முட்டாள்த்தனம் இல்லையா?. கடந்த 25 ஆண்டுகளில் ஏராளமானோர் இந்த கல்லூரிகளில் பயின்று சிற்ப கலைஞர்களாக வந்துள்ளனர். இப்படி பல விஷயங்களை தமிழகத்தில் பார்க்கலாம்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

கர்நாடகாவில் இருந்து வந்த அண்ணாமலைக்கு இதெல்லாம் தெரியாது. மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் பிரதமர் பெயரில் உள்ள திட்டம் என்பதால் தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். இது தவறானது. தமிழ்நாடு அரசு மாநிலத்திற்கு ஏற்ப திட்டத்தை வடிமைத்து, கலைஞர் கைவினைஞர் திட்டம் என்ற பெயரில் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இது மத்திய அரசின் திட்டத்திற்கு பொட்டு வைத்து, பூவைத்து சிங்காரித்த திட்டம் என அண்ணாமலை கூறுவது தவறு. கைவினைஞர்கள் என்பதற்கான வரையறை என்பது மத்திய அரசிலும், மாநில அரசிலும் ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது. ஆனால் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தில் விஸ்வகர்மா குடும்பத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கிவிட்டோம். இது மிகப்பெரிய மாற்றம்தானே. சரி தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் 8.4 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சரி நாடு முழுவதும் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் எத்தனை மாநிலங்களில் எத்தனை பேருக்கு பலன் கொடுத்துள்ளீர்கள் என கூற முடியுமா?

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

பொதுவாக மத்திய அரசின் திட்டங்கள் என்பது குறைபாடுகள் நிறைந்தவையாகவும்,   பயன்பாட்டிற்கு இயலாத வகையிலும் தான் உள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், பிரதமர் மோடியும் ஒன்றுதான். அண்ணாமலை ஆதரமே இல்லாமல் வாயில் வந்தவற்றை எல்லாம் தெரிவிப்பார். பிரதமர் மோடியோ திட்டங்களுக்கான ஏற்படுகளையே செய்யாமல் திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருப்பார்.

இன்றைய நிலையில் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்ன தெரியுமா?. தங்க நகை அடகு கூடிக்கொண்டே செல்கிறது. தற்போது நடுத்தர மக்கள் வறுமையின் உச்சத்துக்கு சென்று கொண்டே இருக்கின்றனர். நடுத்தர வர்க்கம் இறங்கினால் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடும். இன்று வரவுக்கும், செலவுக்கும் கட்டுப்படி ஆகவில்லை. ஏனென்றால் விலைவாசி உயர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. அதை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்றால், மொத்தமாக தங்க நகை அடமானம் கடந்த சில மாதங்களில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்களிடம் உள்ள நகைகளை அடகு வைத்து பணம் புரட்டுகின்றனர். என்ன காரணம் தங்கம் விலை ஏறியுள்ளது. கூடுதல் பணம் கிடைப்பதால் வாங்கி செலவு செய்து விடுகின்றனர். ஆனால் அடமானம் வைத்த நகையை திருப்ப முடியுமா என்றால் முடியாது. ஏனெனில் தங்கம் விலை பலமடங்கு உயர்ந்துவிடும்.

மெட்ரோ 2 - ஆம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: நிர்மலா சீதாராமன்

இதனை கேட்க வேண்டிய நிதி அமைச்சரோ, என்னை இந்தி படிக்க விடாமல் தடுத்தனர், சமஸ்கிருதம் படிக்க விடாமல் தடுத்தனர் என கூறிக்கொண்டிருப்பார். ஒட்டுமொத்தமாக பாஜகவும் சரி, இங்குள்ள அண்ணாமலையும் சரி, இல்லை தமிழகத்தை தாய்வீடாக சொல்லும் நிதியமைச்சராக இருந்தாலும் சரி, பாரதியாரின் நூலை நான்தான் வெளியிட்டேன் என பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடியாக இருந்தாலும் சரி. இவர்கள் அனைவரும் பொய்களை கூறி கொண்டிருக்கிறார்களே தவிர நிஜமாகவே மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவோ, அல்லது நிஜமாகவே ஒரு ஆதாரத்தை கொண்டுவந்து தருவதற்கோ, அல்லது தவறு செய்பவர்களை தண்டிக்கவோ தயாராக இல்லை. அதனால் தான் அதானி விவகாரம் இவ்வளவு தீவிரமாக மாறுகிறது.

அதானி முறைகேடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைத்தானே கோருகிறார்கள். அதை கொடுப்பதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது. 2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். ஏன் பாஜக அரசு கொடுக்க மறுக்கிறார்கள்.ஏனென்றால் அதானி, மோடி எல்லாம் ஒன்றுதான். அதானி கல்விப்பணிக்காக வழங்கிய 100 கோடி ரூபாயை தெலுங்கானா முதலமைச்சர் வேண்டாம் என்கிறார். காரணம் அதானி என்ற பெயர் தவறான எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், அதானியின் பெயர் வெளிநாடுகளிலும் கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது.

விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்? - மோடிக்கு ராகுல் கேள்வி

அமெரிக்காவை விட்டு விடலாம். ஆப்பிரிக்க நாடுகளில் அதானி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? இலங்கையில் அதானி துறைமுகம் ஒப்பந்த பணியும் நடக்காமல் உள்ளது. காரணம் நிதிப்பிரச்சினை. வெளிநாடுகளில் நிதி திரட்டுவதற்காகத்தான் அதானி அந்த துறைமுகத்தை எடுத்தார். ஆனால் தற்போது வெளிநாடுகளில் நிதி திரட்டுவதில் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த துறைமுக மேம்பாட்டுத்திட்டத்தை இலங்கை அரசே செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் புதிதாக வந்த அரசு அதானி நிறுவனத்திடம் மின்சாரம் கொள்முதல் செய்யும் திட்டத்தை ரத்து செய்துள்ளது. அதானி என்ற பெயர் வெளிநாடுகளிலும் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தி உள்ளது. அதனை தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு தான் உள்ளது. ஆனால், மத்திய அரசு தடுத்து நிறுத்த மறுப்பது ஏன்? இதற்கு தான் அண்ணாமலை பதில் அளிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ