spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் அசுர வேகத்தில் மோதிய கார்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!

ஆவடியில் அசுர வேகத்தில் மோதிய கார்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!

-

- Advertisement -

ஆவடி, வசந்தம் நகா் அருகே இன்று காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தம்பதி மீது வேகமாக வந்த காா் மோதியதில், பைக்கில் வந்த தம்பதியனா் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா்.ஆவடியில் அசுர வேகத்தில் மோதிய காா்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!ஆவடி அருகே  திருவேற்காடு, பள்ளிக்குப்பம், ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் அறிவரசன் (41) இவா் பிரைவெட் கால்சென்டர் ஊழியர் பணி புாிந்து வந்துள்ளாா். இவருக்கு சரண்யா (36) என்ற மனைவியும்,  இரட்டை மகன்களும் உள்ளனா். சரண்யா திருவள்ளூரில் ஒரு பிரைவெட் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறாா். அறிவரசன் தனது மனைவி பைக்கில் ஏற்றிக்கொண்டு, இன்று காலை ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது ஆவடி, வசந்தம் நகர் அருகே அதி வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இத்தம்பதியின் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், தம்பதிகளான அறிவரசன், சரண்யா ஆகிய 2 பேரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.  இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக தம்பதிகள் பலியாகினா்.

மேலும் அடுத்தடுத்து சிறிய வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மீது அந்த காா் மேதியது. இதில் வாகனங்கள் கடும் சேதம் ஏற்பட்டது. காா் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த அரசு மருத்துவா் பாரிமார்க்ஸ் என்பவரும் படுகாயம் அடைந்தார்.

we-r-hiring

இச்சம்பவம் குறித்து அருகிலிருந்தவா்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனா். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினா் அங்கு விபத்தில் பலியான அறிவரசன், சரண்யா ஆகிய 2 பேரின் சடலங்களை கைப்பற்றினர். பின்னர் அச்சடலங்களை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த பாரிமார்க்ஸ் என்பவரையும் காவல்துறையினா் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவா் பாரிமார்க்ஸ் என்பவரிடம் காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்,  இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.  இச்சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளனா். தம்பதியினா் உயிரிழந்த இச்சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிா்ச்சியையும் ஏற்படுத்தியது.

போலிக்கட்சிகளின் பெயரில் பல கோடிகள் சுழற்றப்படுவது ஜனநாயக அவலம் – செல்வப்பெருந்தகை வருத்தம்

 

MUST READ