Homeசெய்திகள்ஆவடிவைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்து

வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்து

-

வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்து

ஆவடி பட்டாபிராம் அருகே வைக்கோல் ஏற்றிவந்த லாரி திடீர் தீ பிடித்து எரிந்தது.

பட்டாபிராம் தண்டுரை வயல் பகுதியில் வைக்கோல் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது மின்சார கம்பியில் லாரி உரசியதில் திடீரென லாரியில் இருந்து கரும்புகை கிளம்பியது.

வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்து

இதனை பார்த்த டிரைவர் உடனே லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடினார். சிறிது நேரத்தில் கரும்புகை தீயாக மாறி லாரி முழுவதும் மளமளவென பயங்கரமாக கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. தீ வேகமாக பரவி வானுயர கரும்புகை சூழ்ந்தது.

இதை பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் உடனடியாக ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரி மற்றும் வைக்கோல் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.apcnewstamil.com/news/crime-news/man-arrested-for-burglary-at-welding-workshop-owners-house/87901

ஆனாலும் வைக்கோல் முழுமையாக எரிந்து லாரி முற்றிலும் தீக்கிரையாகி லாரி எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. இது குறித்து பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ