- Advertisement -
மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பத்துார் பகுதியில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டடுள்ளதனை அறிந்து அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். ஆய்வின் போது குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று பால் பவுடர் பாக்கெட் விநியோகம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கொரட்டூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் குழந்தைகளுக்கு பால் பவுடர் பாக்கெட்டுகளை அம்பத்தூர் 7-ஆவது மண்டல குழுதலைவர் மூர்த்தி மற்றும் 83 வது வார்டு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் சென்று வழங்கினர்.