spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகை எவ்வளவு? - விளக்கமான பதில் தர...

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகை எவ்வளவு? – விளக்கமான பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித்​தொகை எவ்​வளவு என்பது குறித்து வரு​மான வரித்​துறை விளக்கமான பதில்​மனுவை வரும் ஜனவரி 12க்​குள் தாக்​கல் செய்ய வரு​மான வரித்​துறைக்கு சென்னை உயர்நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகை எவ்வளவு? - விளக்கமான பதில் உயர் நீதிமன்றம் உத்தரவுமுன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா பாக்​கி​யாக வைத்​துள்ள ரூ.36.56 கோடி வரு​மான வரியை 7 நாட்​களுக்​குள் செலுத்த வேண்​டுமென அவரது சட்​டப்​பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்​றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு வரு​மான வரித்​துறை கடந்த ஜூலை 23 அன்று நோட்டீஸ் அனுப்​பியது.

இதை எதிர்த்து ஜெ.தீபா உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து அந்த நோட்டீஸ்க்கு தடை உத்​தரவு பெற்​றார். அதையடுத்து அந்த நோட்டீஸை திரும்​பப் பெற்ற வரு​மான வரித்​துறை ரூ.13.69 கோடியை செலுத்​தும்​படி புதி​தாக நோட்​டீஸ் அனுப்​பியது.     உயர் நீதி​மன்ற உத்தரவுப்​படி இந்த வழக்​கில் ஜெ.தீபக்​கும் இணைந்​தார். கடந்த முறை இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​த போது நிலு​வைத் தொகை​யில் தனது        பங்​குத்​தொகையை தவணை முறை​யில் செலுத்தி வரு​வ​தாக ஜெ.தீபக் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

we-r-hiring

இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி சி.சர​வணன் முன்​பாக நேற்று மீண்டும்         விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ஜெ.தீபா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்           எம்​.சத்​தி​யகு​மார், “ஏற்​கெனவே ஜெயலலிதா வரு​மான வரி பாக்கி தொடர்​பான  வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி எனக்​கூறிய       வரு​மான வரித்​துறை, அதன்​பிறகு ரூ.36 கோடி கட்ட வேண்​டும் எனக்​கூறியது.       தற்​போது ரூ.13.69 கோடி எனக் கூறுகிறது. வரு​மான வரித்​துறை​யின் இந்த கணக்​கீடு முற்​றி​லும் தவறானது என்​பது தான் எங்​கள் தரப்பு வாதம்.

நிலுவை வரி தொடர்​பாக தெளி​வான எந்த விளக்​கத்​தை​யும் வரு​மான வரித்​துறை தெரிவிக்​க​வில்​லை” என்​றார். அப்​போது ஜெ.தீபக் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஏ.எல்​.சுதர்​சனம், “எங்​களது பங்​களிப்​புத் தொகையை தவணை முறை​யில் செலுத்தி வரு​கிறோம்” என்​றார். வருமான வரித்​துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்           ஜெ.பிர​தாப், தற்போது வரு​மான வரி பாக்​கி​யாக ரூ.13.69 கோடி உள்​ளது.

இதில் தனது பங்​குத் தொகையை தீபக் செலுத்தி வரு​வ​தால், தீபா செலுத்த மாட்​டேன், எனக்​கூற முடி​யாது” என்​றார். அதையடுத்து நீதிபதி, “மறைந்த முன்​னாள் முதல்​வ​ரான ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித் தொகை எவ்​வளவு      என்​பது குறித்து விளக்​க​மான பதில் மனுவை வரு​மான வரித்​துறை தாக்​கல் செய்ய  வேண்​டும்” என உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை வரும்​ ஜனவரி 12-க்​கு தள்ளி          வைத்​துள்​ளனர்​.

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3

MUST READ