spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் - கமல்ஹாசன்

தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – கமல்ஹாசன்

-

- Advertisement -

தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார்.தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் - கமல்ஹாசன்நாடாளு​மன்ற கூட்​டம் சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, இன்று மீண்​டும் தொடங்குகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை​வர் கமல்​ஹாசன் எம்​.பி., சென்​னை​யிலிருந்து ஏர் இந்​தியா விமானம் மூலம் நேற்று டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்​கைகள் குறித்து நீண்ட நாட்​களாக பேசிக்​கொண்டு இருக்​கிறேன். என் பேச்​சுகளை முழு​மை​யாக கவனிப்​பவர்​களுக்கு அது தெரி​யும். தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினை​களை நாம் உடனடி​யாக பேசி சரிசெய்ய வேண்​டும். இதுகுறித்து முதல்​வரிடம் எடுத்​துச் சொல்ல இருக்​கிறோம்.

விசிக தலை​வர் திரு​மாவளவனின் சித்தி மறைந்துள்ளா். இது  திருமாவளவனுக்கு நேற்றே தெரிந்தும் கூட தொண்​டர்​களின் மகிழ்ச்சிக்​காக, பிறந்​த​நாள் விழா​வில் கலந்து கொண்​டார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். சேலத்​தில் நடை​பெற உள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநாட்​டில் என்​னால் கலந்து கொள்ள முடிய​வில்​லை என்பதால், நான் பேசிய பதிவை அனுப்​பி​யுள்​ளேன் என்று​ கூறி​னார்​.

ராகுலுக்கு நேரடி மிரட்டல்! தேர்தல் ஆணையம் பிரஸ் மீட்! மோடி அரசின் அடுத்த திட்டம்!

we-r-hiring

MUST READ