சென்னை ராயபுரத்தில் வீட்டில் வைத்திருந்த கொலு கண்காட்சியை கண்டு ரசித்த திரைப்பட சின்னத்திரை குணச்சித்திர நடிகை சுமதி ஸ்ரீ. கொலு பார்க்க வருபவர்களுக்கு நகைச்சுவையாக கதைகளை கூறும் இரண்டாவது படிக்கும் சிறுவன்.
அம்பிகைக்கு உகந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி பூஜை நடைபெற்ற வருவதால் வீடுகளிலும் கோவில்களிலும் பொம்மைகள் வைத்து கொலு வைத்து வழிபடுகின்றனர்.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு… வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரிப்பு
சென்னை ராயபுரத்தில் ஜெகன் என்பவர் வீட்டில் இதிகாச புராண கதைகள் பாராம்பரிய நிகழ்ச்சிகளை கொலு பொம்மைகளாக வைத்து பூஜைகள் செய்து வருகின்றனர். தசாவதாரம், அஷ்டலட்சுமி, கிருஷ்ணாவதாரம் என ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு அவதாரங்களை விளக்கும் விதமாக கொலு வைக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணர் பிறந்து தவழ்ந்து வெண்ணெய் திருடி உரலில் கட்டி போடுவது போன்ற தத்துரூபமாக வைத்துள்ளனர். கல்யாண மணவரை மேலளதாளம் சமபந்தி சீர்வரிசை பாத்திரங்கள் சீர்வரிசையாக வீடுகளில் பைக் வழங்குவது போன்று பைக் பீரோ சில்வர் பாத்திரங்கள் சீர்வரிசையாக வைத்து கல்யாண செட் அமைக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று கைலாயத்தில் சிவன் கங்கை நதி அருவி விழுவது போல் மீன் தொட்டியில் வைத்து மீன்கள் உலா வரும்படி அமைத்துள்ளனர். மேலும் கொலு பார்க்க வருபவர்களை இரண்டாவது படிக்கும் சிறுவன் ஒவ்வொரு பொம்மைகள் வைத்திருக்கும் கதைகளை நகைச்சுவையாக கூறியது பாராட்டைப் பெற்றுள்ளது.
ராயபுரம் பகுதியைச் சேர்ந்த திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த சுமதி ஸ்ரீ கொலுவிற்கு வந்து பார்வையிட்டு மகிழ்ச்சியை தெரிவித்தார்.