போலீஸ் எனக்கூறி ரூ.67 ஆயிரம் பணம் பறிப்பு
சென்னை அயனாவரத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் பிரபாகரன் என்பவரிடம் ரூ.67 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பில் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்கிறாயா என கூறி மிரட்டி இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
பிறகு பிரபாகரனின் மனைவியை தொடர்பு கொண்டு மிரட்டியவுடன் அவர் வட்டிக்கு கடன் வாங்கிய 60 ஆயிரம் ரூபாய் மற்றும் கல்லாவில் இருந்த 7000 ரூபாய் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 67 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
பணம் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.