ஆந்திராவில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழியாக மினி சரக்கு வாகனத்தில் அட்டைப்பெட்டி நடுவே பதுக்கி வைத்து கடத்தி வந்த 1.18 டன் குட்கா பொருட்களை திருவள்ளூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து வாகன ஓட்டுனரை கைது செய்தனர்.
ஆந்திரா மாநிலம் புத்தூர் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து போலீசார் அத்தகைய வாகனத்தை ஆந்திரா தமிழக எல்லையில்
கண்காணித்து வந்தபோது ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடி கடந்து
சென்ற வாகனத்தை போந்தவாக்கம் பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
போலீசார் கையில் சிக்கி விடக்கூடாது என நினைத்து வாகனத்தில் பழைய இரும்பு கடைக்கு அட்டைப்பெட்டிகள் வாங்கி செல்வது போன்று அட்டைப்பெட்டிகள்
கீழே மூட்டை மூட்டையாக பதுக்கி கொண்டு வந்த 1.18 டன் குட்கா பொருட்களை போலீசார் கண்டறிந்தனர்.
அத்தகைய குட்கா பொருட்களை மினி சரக்கு வாகனத்தில் இருந்து இறக்கி ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
குட்கா பொருட்கள் கடத்தி வந்த மினி சரக்கு வாகன ஓட்டுனரை பென்னலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கால் டாக்ஸி மூலமாக தனது வாகனத்தை சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த ஜெபா என்ற நபர்
ஆந்திரா மாநிலம் புத்தூர் பகுதியில் இருந்து பழைய அட்டைப்பெட்டிகள் கொண்டுவர வேண்டுமென புக் செய்து அழைத்துச் சென்றதாகவும்.
சரக்கு ஏற்றும் போது அப்பகுதியில் தான் இல்லாததால் தனது வாகனத்தில் குட்கா பொருட்கள் ஏற்றியது தனக்கு தெரியாது என்றும் வாகனத்தில் சரக்குகளை ஏற்றிவிட்டு காரில் இருவர் முன்னே சென்று விட்டதாகவும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த ஜெபா ,பொன்ராஜ் இருவரும் பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்து வருவதாகவும் அவர்கள் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதிக்கு அடிக்கடி சென்று பழைய இரும்பு கடைக்கு பொருட்கள் கொண்டு வருவது போல் குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக கடத்தி வந்து போரூர் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து போரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதில் தலைமறைவாக உள்ள பழைய இரும்பு கடை வியாபாரிகள் ஜெபா பொன்ராஜ் இருவரை திருவள்ளூர் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஆந்திராவில் இருந்து மினி சரக்கு வாகனத்தில் பழைய அட்டைப்பெட்டி நடுவே கடத்தி வந்த 1.18 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த மாதம் கோவாவில் எனக்கு திருமணம்….. திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் பேட்டி!