Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே கல்லாகட்டும் லாட்டரி விற்பனை - போலீசார் அதிரடி

ஆவடி அருகே கல்லாகட்டும் லாட்டரி விற்பனை – போலீசார் அதிரடி

-

ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி, 400 அடி வெளிவட்ட சாலை அருகே, ஆந்திரா,கேரளா உள்ளிட்ட அண்டை மாநில ஒன்று, இரண்டு மற்றும் மூன்று, நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக பட்டாபிராம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சென்று சோதனை செய்தபோது, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி அருகே கள்ளாகட்டும் லாட்டரி வற்பனை - போலீசார் அதிரடி

விசாரணையில், பட்டாபிராம் தேவராஜபுரத்தைச் சேர்ந்த கவுதம் (32),  மதுபாலன் (29), ஆவடி, கோவில் பதாகையைச் சேர்ந்த பாபுஜி (30)ஆகிய மூவரும் ரகசியமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி நடத்தியதற்காக போலீசார் இவர்களை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அபராதம் விதித்து, நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

ஆவடி அருகே கள்ளாகட்டும் லாட்டரி வற்பனை - போலீசார் அதிரடி

அதனை தொடர்ந்து  காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூபாய் 20,000 மற்றும் துண்டு லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

MUST READ