
குட்டையில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழந்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றம்!
சென்னை மாவட்டம், தாம்பரத்தில் உள்ள பாரத மாதா தெரு பகுதியில் உள்ள குட்டையில் கரையோரத்தில் 10 வயது சிறுவன் விஸ்வா தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக 10 அடி ஆழமுள்ள மழைநீர் மழைநீர் குட்டையில் விஸ்வா தவறி விழுந்துள்ளார்.
தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சிறுவனை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
குட்டையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.