வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரேஷன் கார்டுகளை தலா ரூபாய் 6,000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நடிகை கௌதமி புகார்… அழகப்பன் உள்பட 6 பேர் கைது…
கனமழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஆய்வுச் செய்த பின் நெல்லையில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது முதலமைச்சர் கூறியதாவது, “சென்னை மக்களைப் போல் தென் மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி தருகிறேன். வானிலை மையம் அறிவித்ததை விட பல மடங்கு அதிக மழை தென் மாவட்டங்களில் பெய்தது. சில இடங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 1801- ஆம் ஆண்டுக்கு பின் தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது.
அமைச்சர்கள், அதிகாரிகள் உடனே களத்தில் பணி செய்ய விரைந்தனர். 12,653 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களுக்கு மட்டும் ரூபாய் 2,000 கோடி தர பிரதமரிடம் வலியுறுத்தினேன். மாநில பேரிடர் மீட்புப் படையின் 375 வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 275 வீரர்கள் பணி செய்தனர். தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கால் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி மிகுந்த பாதிப்படைந்தது.
வருகிறது சூதுகவ்வும் 2… படத்தின் ஹீரோ இவரா?
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தண்ணீர் சூழ்ந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்கப்பட்டது. மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூபாய் 4 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளம் அதிகம் பாதித்த வட்டங்களில் ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூபாய் 6,000 நிவாரணம் வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடியில் லேசான பாதிப்புக்குள்ளான வட்டங்களில் உள்ளவர்களுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும்.
தப்பா பேசாதீங்க… மாரி செல்வராஜ் என்ன அமெரிக்கக்காரனா? – வடிவேலு ஆவேசம்
தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகளை கடும் பேரிடர்களாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்தது தவணைதானே தவிர கூடுதல் நிதியல்ல” எனத் தெரிவித்துள்ளார்.