spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் தாயகம் திரும்பினர்

-

- Advertisement -

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர், இன்று காலை, இலங்கையில் இருந்து விமானம் மூலம், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

2024 டிசம்பர் 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள், கடந்த 25 ஆம் தேதி, இலங்கைத் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

we-r-hiring

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி, அதிகாலை பாம்பன் பகுதியில், கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் வந்து, தமிழக மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தது. மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, 8 மீனவர்களையும், கைது செய்து படகையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் தாயகம் திரும்பினர்

இதை அடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை, உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அவசர கடிதம் எழுதினார். இதை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் இலங்கை நீதி மன்றம் சிறையில் இருந்த 8 மீனவர்களில்,6 பேரை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறையில் இருந்து விடுவித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இதையடுத்துஅவர்கள் 6 பேரும், விமானம் மூலம் ஏற்கனவே  வந்துவிட்டனர்.

இதை எடுத்து தொடர்ந்து சிறையிலிருந்து வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் யாசின், பத்திரியப்பன் ஆகிய 2 மீனவர்கள், கடந்த 25 ஆம் தேதி, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய தூதரக அதிகாரிகள், இந்த 2 மீனவர்களுக்கும், பாஸ்போர்ட் இல்லாததால், எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி, விமான டிக்கெட்டுகள் ஏற்பாடுகளும் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, சென்னை வந்த, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், இந்த 2 மீனவர்களும், அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை வந்து சேர்ந்த 2 மீனவர்களையும், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், 2 மீனவர்களும், ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம்… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

 

MUST READ