spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மகளை அந்த தொழிலுக்கு அனுப்பிய தாய்

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மகளை அந்த தொழிலுக்கு அனுப்பிய தாய்

-

- Advertisement -

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் , ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகளை அந்த தொழிலுக்கு அனுப்பி உள்ளார்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மகளை அந்த தொழிலுக்கு அனுப்பிய தாய்

we-r-hiring

கருமத்தம்பட்டி அருகே முதல் கணவனுக்கு பிறந்த மகளை ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தி தள்ளிய தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி- கிருஷ்ணாபுரம் பகுதியில் ஓரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பணத்திற்காக பெற்ற தாய் தனது மகளை விபச்சாரத்தல் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. பின்னர் அங்கு இருந்த நபர்களை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது, இங்கு உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராசாத்தி என்ற பெண்மணி தனது முதல் கணவர் சண்முகசுந்தரத்துடன் கருத்து வேறுபாட்டால் 20 வருடங்களுக்கு முன் பிரிந்து, பிரேம் நசீர் என்ற நபருடன் திருமணம் செய்துக் கொள்ளாமல் ராசிபாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

அவர்களுடன் முதல் கணவருக்கு பிறந்த 20 வயதான பெண்ணை, ராசாத்தி மற்றும் பிரேம் நசீர் மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் ராசாத்தி,பிரேம் நசீரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர். கைதான ராசாத்தியை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்: பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை உயிருடன் குப்பையில் வீசப்பட்ட சம்பவம்

MUST READ