Homeசெய்திகள்தமிழ்நாடு"விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10, 11- ல் நேர்காணல்"- அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு!

“விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10, 11- ல் நேர்காணல்”- அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு!

-

 

அதிமுக முடிவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10, 11 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசும் தீபிகா படுகோன்

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கான நேர்காணல், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் மார்ச் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள், பின்வருமாறு நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மார்ச் 10- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு திருவள்ளூர் (தனி), சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய தொகுதிகளுக்கும், பிற்பகல் 02.00 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), கோவை ஆகிய தொகுதிகளுக்கும், மார்ச் 11- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு பொள்ளாச்சி,திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகை (தனி), தஞ்சை ஆகிய தொகுதிகளுக்கும், பிற்பகல் 02.00 மணிக்கு சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.

அயலான் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… வந்தது புதிய அப்டேட்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வேண்டியும்; அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்களுக்காகவும் விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும், தவறாமல் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன், மேற்கண்ட கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ