நெல்லை புறநகர் பணிமனையில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. புறநகர் பேருந்து நிலையத்தில் சூழ்ந்திருந்த வெள்ளம் வடிந்ததால் அரசுப் பேருந்துகளை இயக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 60 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை அரசு புறநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 400 ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் மழை குறைகிறது. இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக ஹெலிகாப்டர் புறப்பட்டது.
என்னது… ‘தளபதி 68’ பட டைட்டில் இதுதானா?
கனமழை முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளன. ரயிலில் உள்ள 500 பயணிகளுக்கு உணவு வழங்க மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டது. இரண்டு டன் உணவு, தண்ணீருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று நிவாரணம் வழங்குகிறது.